tag:blogger.com,1999:blog-9319943588413604852024-03-21T21:21:35.887-07:00புதிய கலாச்சாரக் கவிதைகள்புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-931994358841360485.post-33033755011907682922008-02-15T08:37:00.000-08:002008-02-14T20:39:59.213-08:00நலம், நலமறிய நக்சல்பரி...<div align="right">நக்சலைட்டுகளை<br />இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு<br />நம்புகிறார்கள் சிலர்.<br />உண்மையில்<br />இயங்கமுடியவில்லை மக்களால்.<br />.<br />கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்<br />ஒரு இழவு விசாரித்துவர<br />பேருந்து கட்டணத்தைப்<br />பிடிக்க முடியாமல்<br />துருப்பிடித்துக் கிடக்கிறது<br />தொழிலாளியின் வாழ்க்கை.<br />.<br />அங்கங்கே ஆள் வைத்து<br />பணத்தாலே கண்ணி வைத்து<br />எத்தனை முறை கிளப்பினாலும்<br />எழுப்ப முடியவில்லை<br />'எம்ப்ளாய்மெண்ட்' எண்ணை.<br />.<br />ராகு மூணாம் இடம் போகிறார்<br />கேது நாலாம் இடம் வருகிறார்<br />கேட்ட பவுனைப் போட முடியாததால்<br />அக்காமார்கள் மட்டும்<br />அடுப்படியிலேயே கிடக்கிறார்கள்.<br />.<br />ரேசன் அரிசி வடித்த கஞ்சியில்<br />சலவை செய்த உயிரை உடுத்தி உடுத்தி<br />ராத்திரி அறுப்புக்குப் போய் வந்து படுத்த<br />அம்மாவின் கண்கள்<br />கடைசிவரை திறக்கவே இல்லை..<br />.<br />ஊரெல்லாம் கடன்பட்டு<br />தலைமறைவு வாழ்க்கை நடத்தும்<br />உங்களுக்குத் தெரியாதா?<br />புரட்சிக்குக் கடன்படாமல்<br />இனி இயங்க முடியாது என்பது.</div><div align="right">..</div><div align="right"></div><div align="right"><strong>-துரை.சண்முகம்</strong></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-75463227925431159002008-02-14T23:34:00.000-08:002008-02-14T20:36:32.729-08:00"சுயநல அறிவுஜீவிகள்"<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw7vQOMn_ks09zD2Xq648iAyXWt8A7QCsnUCGNTI0kgppwCR0B3l1O1cSNO0IvLIioRWOEHJ4FJqzoRkwyFbHLEdT_edUXzAhaWXQFrm1hDgc7C3ms9FF353BEJ-22kyHsAd5FKqPGUCo/s1600-h/INDIA-NEPAL-3.jpg"></a><br /><div align="right">"ஏ சுயநல அறிவுஜீவிகளே !<br /></div><br /><div align="right">நீங்கள் தப்பமாட்டீர்கள் !<br />..<br />உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்<br /></div><br /><div align="right">இடம் பிடிக்க முடியாதவர்கள்<br /></div><br /><div align="right">ஆனால்<br /></div><br /><div align="right">உங்களுக்கு உண்டி சமைக்கும்<br /></div><br /><div align="right">உங்களுடைய ஆடையை விடுக்கும்<br /></div><br /><div align="right">உங்களுடைய காரை ஓட்டும்<br />உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும்<br /></div><br /><div align="right">உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும்<br /></div><br /><div align="right">அவர்கள் வந்தவுடனே<br />விசாரனை துவங்கும்.<br /></div><br /><div align="right">ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்<br /></div><br /><div align="right">எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது<br /></div><br /><div align="right">ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே<br /></div><br /><div align="right">நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"<br /></div><br /><div align="right">- ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-56365117923425329932008-02-14T21:29:00.000-08:002008-02-14T20:33:58.766-08:00பசுத்தோல் போர்த்திய கேள்விகள்<div align="right"></div><div align="right">என்னையும் </div><div align="right">எப்படி இந்துவாக்கினர்?<br />..</div><div align="right">யாரெல்லாம்</div><div align="right">இசுலாமியர் இல்லையோ</div><div align="right">யாரெல்லாம்</div><div align="right">கிறித்தவர் இல்லையோ</div><div align="right">என்பதில் தொடங்கி</div><div align="right">யாரெல்லாம்</div><div align="right">மனிதர்கள் இல்லையோ</div><div align="right">என்ற பரிணாமத்தில்</div><div align="right">மாட்டிக் கொண்டேனோ நானும்?<br />..</div><div align="right">எப்படி நானும் </div><div align="right">இந்துவாய்....<br />..</div><div align="right">"சூத்திரன்"- என்ற சங்கரமடத்தின்</div><div align="right">கழிப்பறை வாக்கியத்தை</div><div align="right">பெரும் "பாக்கியம்" </div><div align="right">என்று சுமந்து திரியும் </div><div align="right">தாமரைக்கனியின்தோலைப் </div><div align="right">போல</div><div align="right">எனக்குத் தோல் தடிப்பில்லையே!<br />..</div><div align="right">தமிழ் "நீச பாஷை" என்றுமுகம் </div><div align="right">சுளிக்கும் சங்கராச்சாரிக்கு</div><div align="right">அன்றாடம்"அம்மா" </div><div align="right">என்று அழைக்கும் </div><div align="right">என்மே கரிசனம் வந்ததெப்படி?<br />..</div><div align="right">நான் சாணிபோடும் </div><div align="right">ஓசைசமஸ்கிருதமோ?</div><div align="right">எங்கள் குடும்பக்காளைகளைக</div><div align="right">சாப்புக்கு அனுப்புவதைக்கண்டு </div><div align="right">கொள்ளாமல்</div><div align="right">எம் மேல் மட்டும்பாசம் வந்ததென்ன?<br />பெண்டாளும் தந்திரம் </div><div align="right">மாடுகளை வரையிலுமா!<br />..</div><div align="right">வேள்விகளில்</div><div align="right">உயிரோடு எரிக்கப்பட்ட</div><div align="right">எம் மூதாதையர்களின்</div><div align="right">வாரிசுகள் </div><div align="right">நாங்கள்வழக்காடுகிறோம்....<br />..</div><div align="right">இந்துவாக </div><div align="right">இருந்ததில்லை நாங்கள்<br />வைக்கோல் மொம்மைகளைக்</div><div align="right">காட்டும் போனும்</div><div align="right">வாஞ்சையுடன் சுரக்கும்எம் </div><div align="right">..</div><div align="right">பால்மடி<br />வழியும் கண்ணீரையும்</div><div align="right">நடுங்கும்</div><div align="right">முகங்களையும் கூட </div><div align="right">விடாது</div><div align="right">பசியாறும் இந்து மதவெறி<br />..</div><div align="right">எப்படி நாங்கள் </div><div align="right">இந்துவாக முடியும்?<br />..</div><div align="right">எம் சந்ததிப் பகையே </div><div align="right">சங்கர மடமேவேண்டாம் </div><div align="right">விலகுஉழைக்காத வகையினம் </div><div align="right">என்றுஎன்மேல் உள்ள குற்றச்சாட்டை </div><div align="right">உறுதி செய்வதாய் இருக்கிறது </div><div align="right">உனது ஒட்டுறவு<br />..</div><div align="right">எப்படி பொருந்தும்?<br />கரப்பதே என் பாடுகறப்பதே </div><div align="right">உன் பண்பாடு<br />பனிக்குடம் உடையும் </div><div align="right">முன்பேசீம்பாலுக்குச் செம்பு தேடும்</div><div align="right">உன் வக்கிரங்களுக்கு </div><div align="right">மத்தியில்வாழ்வதைவிட<br />கன்றின் கறியை காமுற்ற </div><div align="right">யாக்ஞவல்கியனின் சந்ததியிடம்</div><div align="right">..</div><div align="right">உயிர்பிச்சை பெறுவதைவிட<br />செத்த பின்பும்</div><div align="right">சினை பார்த்து அறுக்கும்</div><div align="right">எம் மக்களுக்கு உணவாகவே </div><div align="right">எனக்கு சம்மதம்</div><div align="right">.<br />இந்துவாக வாழ்வதைவிட</div><div align="right">விலங்காகச் சாவதே</div><div align="right">எனக்குச் சம்மதம்<br />..</div><div align="right">-துரை.சண்முகம்</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-76046756282750321752008-02-14T20:25:00.000-08:002008-02-14T20:29:05.750-08:00எப்படி இனிக்கும்?<div align="right">பிள்ளைகளே,</div><div align="right">புரட்சி எத்தனை இனிப்பானது</div><div align="right">தெரியுமா?</div><div align="right">..</div><div align="right">அதிகாலை எழுந்து</div><div align="right">அவசரமாக குளித்து</div><div align="right">..</div><div align="right">நீங்கள் தின்னும் </div><div align="right">தீபாவளிப் பலகாரங்களை விட</div><div align="right">சகல பணிவோடும் </div><div align="right">..</div><div align="right">சர்ச்சுகளில் நீங்கள் சுவைக்கும்</div><div align="right">அப்பத்தை விட.</div><div align="right">..</div><div align="right">பாத்தியா ஓதி</div><div align="right">பள்ளிவாசலில் தின்னும்</div><div align="right">சர்க்கடையை விடபுரட்சி எத்தனை</div><div align="right">இனிப்பானது தெரியுமா?</div><div align="right">..</div><div align="right">எப்படி இனிக்கும்?</div><div align="right">..</div><div align="right">லட்டுவைப்போலக் கிறங்க வைக்குமா?</div><div align="right">சாக்கலேட் போல எச்சி ஊறுமா?</div><div align="right">சொல்லத்தெரியவில்லை எனக்கும்</div><div align="right">என்றாலும் - அது</div><div align="right">அப்பேர்ப்பட்ட இனிப்பு!</div><div align="right">..</div><div align="right">முதல் சக்கலேட்டுக்காக நீ</div><div align="right">அம்மாவிடம் அழுதாயே</div><div align="right">அப்பாவிடம் அடம் பிடித்தாயே</div><div align="right">அப்போது/உன் நாக்குக்கு மட்டும்</div><div align="right">தெரிந்தா இருந்தது</div><div align="right">சாக்கலேட்டின் இனிப்பு?<br />..</div><div align="right">எனக்கும் அப்படித்தான்<br />எவ்வளவு அழுகிறாயோ</div><div align="right">அவ்வளவு இனிப்பு</div><div align="right">எவ்வளவு அடம் பிடிக்கிறாயோ</div><div align="right">அவ்வளவு இனிப்பு</div><div align="right">எவ்வளவு போராடுகிறாயோ</div><div align="right">அவ்வளவு இனிப்பு.<br />..</div><div align="right">அழு,அடம்பிடி,போராடு</div><div align="right">பொறுக்க முடியாமல் போன பிறகாவது </div><div align="right">உன் அப்பன் கேட்க வேண்டும்</div><div align="right">"அப்படி என்னதாண்டா இருக்கு </div><div align="right">அந்தப் புரட்சியில்" என்று.<br />..</div><div align="right">-துரை.சண்முகம்<br />..</div><div align="right"><span style="color:#ff0000;">சென்னையில் நடந்த நவம்பர் புரட்சி நாள் விழாவில் குழந்தைகளின் குதூகலமாக பங்கேற்பைப் பார்த்தவுடன் எழுந்தது இந்தக் கவிதை.</span></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-91711963570490482492008-02-14T19:40:00.000-08:002008-02-14T20:41:04.257-08:00"காட்டு நடனம்"<div align="right">சித்திரவதைச் செய்யப்பட்ட<br />எங்கள்<br />மார்புகளில் இருந்து<br />வசீகர வயலின்கள்<br />உயிர்த்தெழும்பும்<br />சுருள் வேலிக் கம்பிகள்<br />அவற்றின் தந்திகளாய்<br />நாதமெழுப்பும்<br />உடைந்த<br />எழும்புத் துண்டுகளோ<br />புல்லாங்குழல்களாய்<br />முகிழ்த்தெழும்பும்<br />அங்கு<br />ஒரு காட்டு நடனம்<br />அனல் கக்கும்.<br />..<br />- மிக்கிஸ் தியோடோ ராகிஸ்<br />(கிரேக்க கவிஞர், அரசியல் ஆய்வாளர்)</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-43421425084357564552008-02-11T21:00:00.000-08:002008-02-11T09:00:59.314-08:00இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது!<div align="right"><br />வந்து சேர்ந்தது வீட்டுக்கு<br />வண்ணத் தொலைக்காட்சி<br />வைத்துப் பார்ப்பதற்கேற்ற<br />வாட்டமான இடம்<br />விவாதத்துக்கிடையில்<br />ஒருவழியாக முடிவானது<br />கூடத்து மூலையில் கிடந்த<br />கிழவியின் படுக்கை<br />திண்ணைக்குப் போனது<br />கேட்க ஆளின்றி<br />பாட்டியின் கதைகளும்,அனுபவமும்<br />பேச்சு மறந்து வீணாய்ப் போனது.<br /><br />ஆட்டிவிடும்போது<br />தொலைகாட்சிக்கு<br />அடிபட்டுவிடும் என்று<br />குழந்தையின் தொட்டிலும்<br />கழட்டப்பட்டது முன்வாசலில்<br />கேபிள் கொடி படர்வதற்கு<br />இணங்காத<br />முருங்கையின் கிளை<br />முறிக்கப்பட்டது.<br /><br />ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு<br />ஊறு நேராதவாறு<br />ஐந்து மணிக்கெல்லாம்<br />கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது<br />தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த<br />சினையாடு<br />கண்டு கொள்ள ஆளில்லாமல்<br />வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.<br /><br />படாத இடத்தில்<br />தொலைக்காட்சிக்குப்<br />பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து<br />பையனின் 'ஒளிந்து பிடித்து'<br />விளையாட்டும்<br />வீட்டை விட்டு விரட்டப்பட்டது.<br /><br />விளம்பர இடைவேளைக்கிடையே<br />கொஞ்சம் விசாரிப்பு பின்பு<br />வெடுகென்று முகத்தை திருப்பி<br />'கோலங்கள்'<br />குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்<br />சொல்லாமலே ஓடிப்போனான்<br />சொந்தக்காரன்.<br />தொலைக்காட்சிப் பூவில்<br />தேனெடுக்கத் தவித்து<br />சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து<br />பரிதாபத்தோடு<br />'இச்சு' கொட்டியது பல்லி.<br /><br />மனிதக்குரலற்று வெறிச்சோடிய<br />வீதியைப் பார்த்துபீதியுற்று<br />அலறியது தெருநாய்<br />கதவைத் திறந்து கொண்டு<br />வந்தவனின்<br />மனிதக்குரைப்பைக் கேட்டு<br />நடுங்கிப் போனது நாய்.<br /><br />"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப<br />இங்க வந்தா கத்துற நாயே...!" என<br />அடிக்கப் பாய்ந்து வந்த<br />குடும்பத்தலைவனின் விழிகளில்<br />இதற்கு முன் இப்படியொரு<br />வெறித்தனத்தைப்<br />பார்த்திராத தெருநாய்<br />உயிர்ப்பிழைத்தால் போதுமென்று<br />ஊரை விட்டே ஓடியது.<br /><br />துரை.சண்முகம்<br /></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-931994358841360485.post-54387770555926749542008-02-11T09:15:00.000-08:002008-02-11T08:17:40.215-08:00இயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம்<div align="right"><br />பொதுவாய்ப் பேசினால் </div><div align="right">புரட்சிக்குக் கூட </div><div align="right">ரசிகர் மன்றங்கள் கூடும்.</div><div align="right"><br />கொஞ்சம் </div><div align="right">குறிப்பாய்ப் பேசுவோமே.</div><div align="right"><br />எந்தக் கவிதை </div><div align="right">நான் பாட </div><div align="right">கண்ணில் தெரியும் பூக்களையா </div><div align="right">காலில் குத்தும் முட்களையா</div><div align="right">இலக்கியத் தேனீக்களுக்கு </div><div align="right">எங்களிடம் சரக்கில்லை.</div><div align="right"><br />முதலில் கவிதைகளைக் </div><div align="right">காயப்படுத்துவோம் </div><div align="right">உள்ளேயிருப்பது </div><div align="right">ரத்தமா, சீழா என்ற ரகசியம் </div><div align="right">தெரியும் அப்போது.</div><div align="right"><br />அசை போட்டாலே </div><div align="right">போதுமென்றால் </div><div align="right">இங்கு மாடுகள் கூட </div><div align="right">மரபுக் கவிஞர்கள்</div><div align="right"><br />வார்த்தைகளை அசைப்போட்டல்ல </div><div align="right">வாழ்க்கையை அசைப்போடு </div><div align="right">வரட்டும் புதுக்கவிதை.</div><div align="right"><br />எல்லா இன்பங்களையும் </div><div align="right">சாதாரணமாக்கிவிடுகிறது </div><div align="right">கம்யூனிஸ்டாய் </div><div align="right">வாழ்வதன் இன்பம்.</div><div align="right"><br />எல்லா துன்பங்களையும் </div><div align="right">சாதாராணமாக்கிவிடும் </div><div align="right">கம்யூனிச உணர்வை </div><div align="right">இழப்பதன் துன்பம்.</div><div align="right"><br />சிலருக்குக் </div><div align="right">கம்யூனிசம் பிடிக்கிறது </div><div align="right">கட்சி பிடிக்கவில்லை. </div><div align="right">தேனை பிடிக்கிறது </div><div align="right">மகரந்தக் கிண்ணம் </div><div align="right">பிடிக்கவில்லை.</div><div align="right"><br />எல்லாம் சரி </div><div align="right">எப்போது வரும் புரட்சி </div><div align="right">எப்போது வரும் மழை </div><div align="right">என்பது போல </div><div align="right">மலைக்கிறார்கள் சிலர்.</div><div align="right"><br />வானில் இடிபாடுகள் </div><div align="right">இருந்தால் மட்டும் போதாது </div><div align="right">வளி மண்டலத்தின் </div><div align="right">வலுவான இயக்கமின்றி </div><div align="right">வராது மழையும்.</div><div align="right"><br />வாழ்க்கையில் இடிபாடுகள் </div><div align="right">இருந்தால் மட்டும் போதாது </div><div align="right">வலுவான இயக்கமின்றி </div><div align="right">வராது புரட்சி கூட. </div><div align="right"> </div><div align="right">வாருங்கள் இயக்கத்திற்கு!</div><div align="right"><br />- துரை. சண்முகம்</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-51508364361207477292008-02-11T08:08:00.000-08:002008-02-11T08:15:18.498-08:00வசந்தத்தின் இடி முழக்கம்<div align="right">இடி முழக்கங்கள் </div><div align="right">இல்லாதது போல் </div><div align="right">தோன்றும் காலமிது<br /></div><div align="right">..</div><div align="right">வசந்தங்களின் வழியிழந்து </div><div align="right">விடியலின் பூபாளங்கள் பொய்யாய்ப் </div><div align="right">பழங்கதையாய் மெல்லப் போனதுவாய் </div><div align="right"></div><div align="right">புரட்சியையும் தோன்றச் செய்யும் </div><div align="right">புரட்டல்களின் காலமிது.<br /></div><div align="right">..</div><div align="right">கல்கத்தாவின் வீதிகளில் </div><div align="right">உறைந்த இரத்தத்தில் </div><div align="right">உதிரக் கவுச்சியில் </div><div align="right">இந்த தேசத்தின் புரட்சி </div><div align="right">வரலாறு பொதிந்து கிடக்கிறது.<br /></div><div align="right">..</div><div align="right">முதலாளித்துவம் </div><div align="right">மார்க்கண்டேயவரம் </div><div align="right">பெற்றதாய் </div><div align="right">மறுபடியும் மறுபடியும் </div><div align="right">உச்சாடனங்கள்!<br /></div><div align="right">..</div><div align="right">நெரிக்கப்பட்ட குரல் வளைகளிலிருந்து </div><div align="right">எழும்பிக் கொண்டிருக்கின்றன </div><div align="right">சொற்கள் - இந்த முறை </div><div align="right">வசந்தம் வந்தே தீரும்.</div><div align="right">..<br />- அரசு</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-80180010937115904712008-02-10T14:12:00.000-08:002008-02-10T00:43:39.610-08:00இப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா !<a href="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/parai.jpg"><img style="WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/parai.jpg" border="0" /></a><br /><br /><div align="right"><br /><a href="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/parai.jpg"></a><br />இனியும், உன் தலை<br />நிலம் நோக்கி....?<br />வேண்டாம் இந்த வெட்கக்கேடு.<br />முற்றுபுள்ளியை<br />முதலில் அடிமைச்சாசனத்தின்<br />நெற்றியில் வை.<br />உன் கையில் பற்றியுள்ள<br />மரக்குச்சிகலைத் தூக்கித் தூற எறி.<br />ஆதிக்க வர்க்கங்களின்<br />விலா எலும்பினை உடைத்து<br />பறையிசை எழுப்பு,<br />அசுர கானம் முழங்கி<br />விழாவினைத் துவங்கு.....<br />எத்தனை நூற்றாண்டுகள்<br />நம் முதுகில் அவர்களின் கால்கள்?<br />அந்த வர்க்கங்களின்<br />நரம்புகளை உருவி, அதில்<br />அவர்களின் சுயநல<br />இதயங்களைக் கோர்த்து<br />வண்ணக் காகிதங்களைப் போல்<br />உன் வீதி முழுவதும்<br />தோரணங்கள் கட்டு<br />உணவு,<br />உடை,<br />வீடு,<br />நிலம்.... அனைத்தும் ஆக்கிரமித்த<br />அவர்களின் கோரப்பிடியிலிருந்து<br />அத்தனையும்<br />பறிமுதல் செய்து<br />எதுவுமே இன்றி நிற்கும்<br />உன் பாட்டாளித் தலைமுறையின்<br />பாதங்களுக்குக் கீழ் பரப்பு.<br />ஒவ்வொரு நெல் மணியும்<br />ந்ம் குருதியில் பிரசவித்த வலியை<br />நானும் நீயும் மட்டுமே<br />உணர்ந்திட முடியும்.<br />நம் வீட்டுப் பாத்திரங்களில்<br />காற்று நிரம்பி இருக்க,<br />விளைந்ததைத் தின்றுவிட்டுச்<br />செரிக்காமல் நடைபயிலும்<br />அவர்களுக்கு எப்படித் தெரியும்<br />நம் வயல் வெளித்தவங்கள்?<br />தெரிவிக்கத்தான் வேண்டும்<br />பூமியெங்கும் வேர்களாய்<br />நம் கால்களை இறக்கி<br />மரங்களென நின்று<br />அதையும் மீறி<br />யாராவது நம்மை அசைக்க<br />முயற்சித்தால்......<br />இதுவரை,<br />நிலத்தை மட்டுமே பிளந்த<br />கலப்பையின் கொழுவை உருவி<br />அவர்களின் நெஞ்சில் இறக்குவோம்.<br />எத்தனை நாள்தான்<br />நீயும் நானும் மட்டுமே<br />குருதியினைச் சிந்துவது?<br />***************************<br /><strong><span style="color:#ff0000;">கவிதையும், ஒவியமும்<br />முகிலன்<br /></span></strong></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-10876161375357508482008-02-10T14:08:00.000-08:002008-02-10T00:42:31.517-08:00நிலத்தைப் பழிக்கும் நெல்லுமிரட்டிகள்?<div align="right">"கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்<br />கருத்துரிமை பறிபோகு" மென்று<br />முறுக்கிக் கொண்டு போன<br />கதாசிரிய நண்பனைக்<br />காணநேர்ந்தபோது<br />தயாரிப்பாளர் சொல்லச் சொல்ல<br />தயக்கமில்லாமல் தனது கதையை<br />நறுக்கிப் போடுக் கொண்டிருந்தான் அவன்.<br />..<br />"புரட்சி, போராட்டம் இதெல்லாம்<br />என் இளகிய இதயத்தில் - இயலாது<br />இயக்கத்தில் சேரமாட்டேன்" என<br />பழக்கத்தை முறித்துக் கொண்ட<br />பழைய நண்பனைப் பார்க்கப் போனால்<br />ஆட்டுக்கறி உரிப்பது போல<br />ஒரு பெண்ணின் அங்க அவயங்களை<br />பாட்டில் பச்சையாக உரித்துக் கொண்டிருந்தான்<br />" என்னடா இப்படி" என்றால்<br />சினிமாவில் சேர்ந்துவிட்டேன் என<br />சிரிக்கிறான் கோரமாக.<br />"இலக்கியவாதிகளுக்கே உரிய அடையாளம் கிடைப்பதில்லை....<br />கட்சிகள் வாகனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என<br />காட்டமாகப் பேசிய இலக்கியவாதியை தேடிப் போனால்<br />" ஓ அந்த ஆம்வே (AMMY) ஏஜெண்ட்டா" என<br />அடையாளம் காட்டிகிறார்கள் தெருவாசிகள்.<br />"எனக்கு இலக்கியம் பண்ணத் தெரியும்<br />அரசியல் பண்ணத் தெரியாது" என்று<br />இரட்டுற மொழிந்து<br />விலகிச் சென்ற நண்பனை விசாரித்தால்<br />இப்போது பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வீடாம்.<br />எப்படியெனக் கேட்டால்<br />கனிமொழியின் இலக்கியச் சந்திப்பால் வந்த கோட்டா<br />என்கிறார்கள் கூட இருப்பவர்கள்.<br />..<br />"வீரமிக்க தமிழ்மணம்<br />இப்போது ஈழத்திலிருக்கிறது" என்று<br />கவியரங்குகளில் கைதட்டல்களை எழுப்பும்<br />அண்ணணைத் தேடினேன்,<br />'வாடி வாடி நாட்டுக்கட்டை' க்கு அடுத்த வரிகளைத் தேடி<br />அவர் ஆத்துப் பக்கம் போயிருப்பதாய்த் தம்பிகள் சொன்னார்கள்.<br />மலம் உருட்டும் வண்டுகள் கூட<br />வெளிப்படையாய் இறங்குகின்றன<br />மனங்கரத் துடிக்கும் இலக்கியவாதிகளே<br />நீங்கள் மட்டும் ஏன் இப்படி?<br />..<br />துரை.சண்முகம்</div><div align="right">..</div><div align="right">புதிய கலாச்சாரம் ஜூலை 2003 இருந்து<br />************************************************<br />(<strong>குறிப்பு: நெல்லுமிரட்டி என்பது நெல்லுடன் சேர்ந்து வாழும் நெற்பயிரைப் போலவே தோற்றமளிக்கும் களை)</strong></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-73335311451334479342008-02-10T14:01:00.000-08:002008-02-10T00:40:24.859-08:00அந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்லையா?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMsLUzy-rDmSHctkDF9RckLZyHnrNfjWJl6Gc3w2rNpTv4UVB8RzXjn7l08Yr_GZD8NXNCJtS2YaO9XTLhvWNL_A8yC5gFG12DthSEARIYayPe63C2nB4w6qs9pOzpf5hGDkmgL00Q2AY/s1600-h/child-1.png"><img id="BLOGGER_PHOTO_ID_5165268466057189650" style="CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMsLUzy-rDmSHctkDF9RckLZyHnrNfjWJl6Gc3w2rNpTv4UVB8RzXjn7l08Yr_GZD8NXNCJtS2YaO9XTLhvWNL_A8yC5gFG12DthSEARIYayPe63C2nB4w6qs9pOzpf5hGDkmgL00Q2AY/s200/child-1.png" border="0" /></a><br /><br /><div align="right"><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzkBC96jZAqcB8M4JqNolxTmal9BSCJ4CadG479TtpIMuq0MkKCvxMsx2UYBLtGTwo53P5AXI7-1RNHoi4c_UhS6K8Me0c0iH3Yo1QmiLqrR9h5-1LxkipaY5ZNQ-9Kn5cqd_IuZ6fRw/s1600-h/child-1.gif"></a><br />வீட்டில் புரையேறும்போதும்<br />யாரோ நினைப்பதாய்<br />உறவு பாராட்டும் உள்ளங்களே<br />வெளியே சிலர் போராடும்போது<br />நீங்கள் உறவாக நினைத்ததுண்டா?<br />தனது நெல்லுக்கும் கரும்புக்கும்<br />நியாயா விலை கேட்கிறான் விவசாயி<br />அவனது தற்கொலைக்கான மருந்தையும்<br />அந்நியக் கம்பெனிகளிடம்<br />வாங்கச் சொல்லி<br />வர்த்தகச் சட்டம் போடுகிறது அரசு.<br />கடனும் வட்டியுமே<br />கண்ணிகைகள் ஆனதனால்<br />தூக்கம் தொலைந்து<br />கண்ணின் நிறம்மாறிக்<br />கருஞ்சிவப்பு ஆனாலும்<br />அந்தக் கண்களின் ஈரத்தையும்<br />கரும்பின் கால்களுக்குத் தந்து நிதம்<br />பச்சையம் மாறாமல் பார்த்துக்<br />கொள்வான்<br />கரும்பு விவசாயி.<br />சமைந்து விட்டதற்கான சமிக்ஞையை<br />தோகைத் தாவணி அசைவிற்காட்டும்<br />கருப்பங்கொலை.<br />கட்டிக் கொள்ள<br />கவர்மெண்டும் தயாரில்லை<br />கட்டுப்படியான விலைக்குத்<br />தரகர்களும் வருவதில்லை.<br />கணுக் கணுவாய்<br />காயும் இளமை கண்டு சகிக்காமல்<br />கோதிவிட்ட தன் கைகளாலேயே<br />கொள்ளி வைக்கிறான் விவசாயி<br />அந்த நெருப்பின் அவலம்<br />உங்கள்<br />நெஞ்சத்தைப் பற்றவில்லையா?<br />..பூ லாரி தூக்கிக் கோவிலுக்குப்<br />போகையிலும் "நீ வாயும் வயிறுமா இருக்குறவ.<br />இங்ககொடு"<br />எனத் தான் வாங்கும் உள்ளங்களே.<br />..அதோ...தார்வாளியோடு<br />நடுரோட்டில் ஒருத்தி<br />அவளது கர்ப்பவெப்பத்தின்<br />காங்கல் தாங்காமல்<br />கருங்கல் ஜல்லியும் இடிந்து நொறுங்கும்<br />நீங்கள் ?<br />..எத்தனைச் சாலைகள் போட்டாலும்<br />ஊர்போய்ச் சேருவதில்லை<br />ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை.<br />கால் இடித்தாலும்<br />"கட்டைல போவ!<br />ரோடு போட்டுவச்சானுவ"<br />என்று பொதுவாக திட்டும் உங்களுக்கு<br />.."சாலைப் பணியாளர்களை நிரந்தரமாக்கு<br />தனியாராக்காதே" என்று<br />கொதிக்கும் தாரிலிருந்து<br />ஒலிக்கும் அவர்களது குரல்<br />உறவில்லையா?<br />..<br />ஐஸ் வச்ச மீனு நல்லாயிருக்காது<br />அப்படியே வேணுமென்று<br />ஆசைப்படுவோரே.<br />உப்புக்காற்றை உள்ளே வாங்கி<br />வெறும் பீடி நெருப்ப்பில் இரவைத் தீய்த்து<br />ஆழ்கடலெங்கும் அலசினாலும்,<br />அந்நியக்கப்பல் மேய்ந்து விடுவதால்<br />வலைக்குள் வறுமையே அகப்படும்<br />நித்தம்<br />..ஐசில் வைத்துப் பாதுகாக்க<br />அவர்களுக்கு வசதியில்லை<br />அதோ அப்படியே கிடக்கிறது<br />மீனவன் பிணம்<br />ருசித்துத் தின்ற சொந்தங்களே<br />என்ன? இதையும்<br />ரசித்துப் பார்க்க இயலுமா?<br />..மயிலுக்குப் போர்வை கொடுத்தான்<br />பேகன் என்பதை<br />மனப்பாடப் பகுதியில் வைத்து<br />மரியாதை செய்யும் சுற்றத்தீரே!<br />இந்த மாகணத்துக்கே போர்வை தந்த<br />ஈரோடு, பவானி நெசவாளர்கள்<br />இப்போது அரசின்<br />இறக்குமதிக் கொள்கைக்கெதிராய்<br />வீதியிலே!<br />..என்ன மயிருக்குடா போராட்டம் என<br />மிரட்டும் தடைச் சட்டம்.<br />..உயிரிழை உருகும்<br />அந்த நெசவாளர்களுக்கும்<br />உங்கள் மானத்திற்கும்<br />உறவில்லையா, சொல்லுங்கள்?<br />..மின்சாரக் கட்டுமானப் பணியின் போது<br />காக்கை குருவிகள் போல<br />கம்பிகளில் அடிபட்டுச் செத்துப்போன<br />தொழிலாளர்களின் சாவை விடக்<br />கொடூரமானது<br />அதை<br />அந்நியன் ஆக்கிரமிக்குபோது<br />அசையாமல்<br />பார்த்துக் கொண்டிருப்பவர்களின்<br />வாழ்வு.<br />..<br />உங்கள் இருப்புப் பாதையின்<br />தாதுப் பொருள்<br />அதற்காக இறந்த தொழிலாளர்களின்<br />தண்டுவடம் என்றால் தப்பில்லை.<br />தேசத்தின் மிகப்பெரிய துயரம்<br />ஒருவேளை சோறில்லை என்பதல்ல<br />இந்தத் தேசம் நமதல்ல என்பதுதான்.<br />யார் தடுத்தாலும்<br />யார் தடை செய்தாலும் அதோ அவர்க்ள்<br />தொழிலாளர்கள், விவசயிகள்<br />மாணவர்கள்<br />வீதிக்கு வருகிறார்கள்.<br />..<br />ஓரமாய் ஒதுங்கி<br />வேடிக்கை பார்க்கும் விசித்திரங்களே<br />உங்களுக்கு வேறு வேலை இருக்கிறதா?<br />போங்கள்<br />..<br />வீட்டு வாசலில் உங்களுக்கான<br />அடிமை வரி காத்திருக்கிறது<br />" அய்யோ எங்களுக்குமா? " என்று<br />அலறும்போது<br />நீங்களும் தடை செய்யப்படுவீர்கள் !</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-59201689227710637332008-02-10T13:55:00.000-08:002008-02-10T00:41:35.806-08:00தோழருக்காக ஒரு உதவி<div align="right">ஒரு காந்தியால் ஏற்பட்ட<br />அகிம்சையின் இரணமே ஆறவில்லை<br />ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?<br />பகத்சிங் படையல்லவா<br />பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.<br />இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்<br />வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்<br />என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.<br />மதவெறியை மாய்ப்போம்,<br />மனித நேயம் காப்போம் என்று<br />தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு<br />விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு<br />இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்<br />கம்யூனிசமா? என்றேன்.<br />தோ....ழ....ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல<br />என்றார் அழுத்தமாக.<br />அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து<br />சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?<br />மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,<br />மனப்பாடம் செய்தவர் போல<br />எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல<br />என்றார் திருத்தமாக.<br />மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்<br />சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்<br />குருதிப்புனல் கமலஹாசனுக்கும்<br />தேவர்மகன் பாரதிராஜாவுக்கும்<br />திரைப்பட விருதா என்றேன்.<br />த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல<br />என்றார் தயக்கமின்றி.<br />தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்<br />ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்<br />தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.<br />அது என்ன வர்க்க ஸ்தாபனமா<br />வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்<br />தனித்த சிரிப்புடன்.<br />'நானொரு பாப்பாத்தி' என்று<br />கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற...ஜனநாயக....முற்போக்கு என்றீர்களே<br />கனவு என்னாயிற்று என்றேன்.<br />தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது<br />என்பது போல<br />கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.<br />இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்<br />" மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே<br />தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல"<br />..<br />துரை.சண்முகம்<br />..<br />புதிய கலாச்சாரம் செப் 2003 இருந்து</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-26499708929697631422008-02-10T13:37:00.000-08:002008-02-10T00:37:58.771-08:00நாடகத்தில் இந்த முறையும்.....<a href="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/vote-add.jpg"><img style="WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/vote-add.jpg" border="0" /></a><br /><br /><div align="right"><br /><a href="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/vote-add.jpg"></a><br />புதிதாய் ஏதும் போதை தேவையில்லை<br />வாக்குறுதிகளே போதும்<br />..<br />தேர்தல் காலம் விசித்திரமானது<br />திகைக்க வைக்கும் மாற்றம் நிறைந்தது<br />..பாழாய்ப்போன குட்டிச் சுவரிலும்<br />சுவரொட்டி துளிர்க்கும்<br />சூரியஒளி புக முடியா<br />மூத்திரச் சந்திலும்<br />'சின்னங்கள்' பூக்கும்<br />ஒட்டடைக் கோலும் கையுமாய்<br />ஓடிவரும் சிலந்திகள் வீடுதேடி<br />..<br />வீடில்லாதவர் பக்கமோ<br />புதிய திட்டமிருப்பதாய்<br />கறையான்கள் கர்ஜிக்கும்<br />..<br />சாக்கடையை அறவே ஒழிக்கப்போவதாய்<br />கொசுக்கள் கோஷ்டி சேரும்.....<br />..<br />பழுத்த பன்றிகளோ<br />தங்கள் வாய் நாறாதென<br />சட்ட மலங்களுக்குள்ளேயே<br />சந்தனம் எடுப்பதாய்<br />'சிவப்பு' சூளுரைக்கும்.<br />..<br />இப்படிக்கூடவா?<br />கக்கூசுக்குள்ளும்<br />அக்கறையாய் பணி செய்ய காத்திருக்கும்<br />வேட்பாளர் பெயரோடு<br />'பெரியவாள்' ஆசி மணக்கும்.<br />..வெறுங்கையை நக்கிய வாழ்க்கையில்<br />வேறேதோ மாற்றமென்று<br />ஓட்டுச்சீட்டை ஓட்ட நக்க வந்தால்<br />..<br />வாக்காளர் பட்டியல் மேல்<br />விலைப்பட்டியல் விழுந்து<br />திரும்பவும் குடல் சரியும்<br /></div><div align="right">-துரை.சண்முகம்<br /></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-86769386253576328792008-02-10T13:36:00.000-08:002008-02-10T00:36:56.887-08:00எனது கவிதைகள்<p align="right">"எனது கவிதைகள்<br />சாகட்டும்<br />போர்க்களத்தின்<br />சாதாரணச்<br />சிப்பாயைப் போல"<br />...<br />-கவிஞர் மாயகாவ்ஸ்கி</p>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-68314864640098569392008-02-10T13:35:00.000-08:002008-02-10T00:36:22.436-08:00"புயல் மையம்"<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAuwgu1ktuCakh-rAaLNK1erAnH8mtc66dCm9zNh2rYyZUKnrYFPbt5GWL8VMGmvNhhIqYM9OnyxptTErxxuudoeVWajVGI9JHpt_QY0vEV2UfOTZDXMz8DflkHdc_liFpsA-wm4_CJfI/s1600-h/puyal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5165267491099613442" style="CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAuwgu1ktuCakh-rAaLNK1erAnH8mtc66dCm9zNh2rYyZUKnrYFPbt5GWL8VMGmvNhhIqYM9OnyxptTErxxuudoeVWajVGI9JHpt_QY0vEV2UfOTZDXMz8DflkHdc_liFpsA-wm4_CJfI/s200/puyal.jpg" border="0" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpCmrIqyqbNZDgQFdACZPLgSAksmkaXDpmTuwShJPPcjW-_5q4HhKnLVoKwAxEqBeMVhAfEQgHAGLtbcrHEevzVgkaLXhtrFjipYuvmLcq1smexFP-q4bgDFfWybDth00ZNdL4W_2k_Ug/s1600-h/puyal.jpg"></a><div align="right"><br />தேர்தல் காலங்களில்<br />சூறாவளிச் சுற்றுப் பயணம்<br />..<br />சூறாவளி ஓய்ந்தபின்<br />வாக்காளர்களின்<br />பிணங்களின் மீதும்<br />வாக்குறுதி வழங்க<br />இன்னொரு பயணம்.<br />..<br />உங்கள்<br />ஒரு சொட்டு கண்ணீர்கூட<br />வெள்ள அபாயத்தை<br />அதிகரிக்கக் கூடும்<br />..<br />உங்களால் சாவதைவிடவும்<br />உங்களால் வாழ்வது கொடிது.<br />..<br />விதைக்க அகழந்த மண்ணையும்<br />வேரிலேயே பொத்திவைத்து<br />வியர்வையில் குளிர்விக்கும்<br />எங்கள் மேல்<br />எப்படி வந்தது இயற்கையில் சீற்றம்?<br />..<br />மாங்குரோவ் காடுகளை<br />நீங்கள் மேய்ந்தபோது<br />அறியவில்லை நாங்கள் -<br />..<br />உங்கள் வங்கிக் கணக்கில்<br />வலுவாக மையம் கொண்டுருக்கும்<br />மூலதனம்<br />வங்காள விரிகுடாவிலிருந்து<br />எங்களைக் காவு கொள்ளும் என்பதை.<br />..<br />காற்றுக்கு<br />உயிர்களை சுவாசிக்கவும்<br />தண்ணீருக்கு<br />இரத்தத்தைக் குடிக்கவும்<br />பயிற்றுவித்தது யார்-<br />நீங்கள்தானே?<br />..<br />புவி ஈர்ப்பு விசைகூடப்<br />பொதுவாக இல்லாத<br />நாடு இது - விளங்கிக் கொண்டோம்.<br />..தண்ணீர் வடிய வடிய<br />ஊற்றெடுக்கும் பிணங்களின்<br />விழிகளில் இருக்கிறது<br />எங்கள் வெள்ளை அறிக்கை.<br />..எஙக்ள் சாவுக்கு<br />என்ன விடை?<br />..<br />தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்<br />முணுமுணுக்கிறார்கள் -<br />"உலகம் அழியப் போகிறது"<br />..உண்மைதான்<br />உஙக்ள் உலகம் அழியத்தான் போகிறது.<br />..<br />துரை. சண்முகம்<br /></div><div align="right">டிசம்பர் 1999 புதிய கலாச்சாரம்<br /></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-91293163689221002422008-02-10T13:02:00.000-08:002008-02-10T00:35:01.463-08:00"விறலி விடு தூது"<p align="right">அயல்நாட்டுக் கடனில்<br />அலங்காரம் செய்கிறாரகள் 'பாரதமாதாவுக்கு'<br />..<br />உதட்டு சாயத்திற்கு மட்டும்<br />உனது இரத்தம்<br />..<br />ஒப்பனைகளின் சுமைதாளாமல்<br />நெளிகிறது தேசியக்கொடி<br />..<br />பொட்டுவைப்பதும் இந்து தர்மம்<br />பொட்டுக் கட்டுவதும் இந்துதர்மம்<br />..<br />தயங்கும் தேசத்திற்கு புத்தி சொல்லி<br />தாராளமாய் விடுகிறார்கள் தூது<br />..<br />அப்பன் வருவான் மகன் வருவான்<br />ஜப்பான் வருவான் , அமெரிக்க வருவான்<br />தப்பென்று தள்ளாதே<br />எவன் வந்தாலும் 'இருப்பு' கொள்வாய்<br />இளைய பாரதமே !<br />..<br />காவிரியின் கழிமுகம் காய்ந்தாலென்ன<br />கருகும் குருத்துக்களை<br />கடல் நீரால் தலைமுழுகி<br />பெரும் இலாபமே ஒழுக்கமென்று<br />கயல்விழி காட்டி வலைகளோடு இணங்குவாய்<br />வளமான இறால் குஞ்சே!<br />..<br />குறிஞ்சி மலைத்தேனை<br />எவன் கொண்டு போனாலென்ன<br />வேப்பங்கனிகளையும்<br />வெளிநாட்டான் கொண்டாலென்ன<br />'கோக்கோ கோலாவின்' குளிரில் நனைந்தபடி<br />தேசம் ஒரு தேன் கிண்ணம்<br />திருமுடுதற்கோர் விலையென்று<br />உலகத்தரம் நோக்கி<br />உயர்ந்திடுவாய் பொன் வண்டே !<br />..வலையோசை எழுப்புதல் போல்<br />உன் அலையோசை கடல்மேனி<br />அந்நியனுக்களித்தாலோ அன்னியச் செலவாணி<br />உள்ளூர்ப் படகுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு<br />பன்னாட்டு திமிங்கலத்தை<br />நெஞ்சாரத்ட் தழுவிடுவாய் நெய்தல் நித்திலமே!<br />..<br />தமிழனா,இந்தியனா?<br />தரம்பார்க்க தேவையில்லை<br />கடின உழைப்பாற்ற கைகள் இருந்தாலும்<br />இடமில்லையெனச் சொல்லி எறிந்துவிட்டு<br />'முதல்' கொண்டு வருபவனை<br />முல்லை மணங்கமழ வரவேற்று<br />கதவை திறப்பாய் கனிவான பாரதமே!<br />..<br />மருதத்தை நெய்தலாக்கி<br />மண்ணையெல்லாம் பாலையாக்கி<br />'தூது' தொடர்கிறது<br />'தூ'...மானம் போகிறது.<br />..<br />துரை. சண்முகம்</p><p align="right"> புதிய கலாச்சாரம் ஆக,செப்,அக் 1994</p><div align="right"></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-49193632439863269232008-02-10T10:24:00.000-08:002008-02-10T00:25:18.567-08:00WTO என்றொரு ஆக்டோபஸ் !<div align="right">ஓடு! ஓடு!<br />கடித்துக் குதறிவிடும்<br />ஓடு !<br />உயிர் பிழைக்கும் ஆசையில்லையா?<br />ஓடு ! ஓடு ! ஓடிவிடு !<br />நீ நினைப்பதுபோல்<br />அது சைவமில்லை<br />'இவர்களை' நம்பி நிற்காதே! ஓடு !<br />.<br />'வெள்ளைப் புறா'<br />சமாதான சின்னமில்லை<br />அதன் கூட்டுக்குள்<br />எப்போதும் சதைத்துணுக்குகள்<br />ஓடு ! ஓடு ! ஓடிவிடு !<br />.<br />புற்றுகளிலிருந்து<br />எறும்பு பிடித்துண்ணும்<br />குரங்குகளைக் கண்டதுண்டா?<br />கையில் ஒரு குச்சி<br />அதுதானிந்த அரசு<br />ஓடு ! ஓடு !<br />.உன் தலைமயிருக்கு<br />அவனிடம் இருக்கிறது<br />காப்புரிமை.<br />மொட்டையடிக்க முயற்சி செய்யாதே!<br />கத்தியும்<br />அவனிடமே இருக்கிறது.<br />ஓடு ! ஓடு ! ஓடிவிடு !<br />.<br />இனியெல்லாம் தனியார்மயம்தான்<br />வலதுகை ஒருவருக்கு<br />இடதுகை ஒருவருக்கு<br />விரல்கள் பத்தும்<br />வேறொருவருக்கு<br />சரி!<br />நகங்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டாயா?<br />நகங்களில் அழுக்கெடுக்க<br />'புதிதாய்' அறிமுகமாகியிருக்கிறது.<br />ஐ.எஸ்.ஐ ம் முத்திரையுடன்<br />விலை வெறும்<br />ஐம்பதே ரூபாய்தான்!<br />வாங்கிவிட்டாயா?<br />.ஏய்? இதென்ன?<br />காதுகளை அறுத்துப் போட்டுவிட்டு<br />ஓடுகிறாய்!<br />ஓடு ! ஓடு !<br />.எங்கேதான் போகமுடியும்?<br />பூமியின் விளிம்புக்கு?<br />பிரபஞ்சத்தின் எல்லைக்கு?<br />ஓடு ! ஓடு !<br />.எல்லா வழிகளும்<br />அடைத்து விட்டன.<br />தவிர்க்க முடியாதினி!<br />.<br />மூடிய அறைக்குள்<br />மாட்டிய பூனை<br />என்ன செய்யும்?<br />..<br />அதுகூடவா<br />நம்மால் முடியாது?<br />சொல்! தொழிலாலர் வர்க்கமே!.</div><div align="right"> </div><div align="right">-தீபன்</div><div align="right"> </div><div align="right">புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2000</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-85491050669396474172008-02-10T09:23:00.000-08:002008-02-10T00:24:31.817-08:00"நக்சல்பாரிகளின் கூட்டுப்பாடல்"<a name="8926645503373922423"></a><div align="right"><br /><br />"காலியாய்க் கிடக்கிறது<br />அரிசிப் பானை<br />ததும்புகிற்து<br />விழிக்குடம்<br />இதயம் நோகிறது<br />தாயே உன்னை நான்<br />எப்படிக் காப்பாற்றுவேன்?<br />இனியும் நான்<br />இங்கே இருக்க முடியாது -<br />அதோ<br />மக்கள், படை செல்கிறது<br />மலைகள் அதிரும் ஒலிகேட்கிறது<br />மாட மாளிகை நொறுங்கும்<br />ஒலி கேட்கிறது<br />இனியும் என்னைக்<br />காத்திருக்க வைக்காதே<br />தாயே<br />நானும்<br />அங்கே போக வேண்டும்<br />விடியலைக் கீறிச்<br />சூரியனைக் கொண்டு வர!"</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-20480684719143200742008-02-10T08:22:00.000-08:002008-02-10T00:23:50.813-08:00"நாளை உலகம்"<a name="629119025159230757"></a><div align="right"><br />என் தெருவில்<br />தொகுதி எம்.எல்.ஏ<br />திண்ணையில் எம்.பி<br />.<br />சரியாக வரும்<br />நகரப் பேருந்து<br />தட்டுப்பாடு இல்லாத<br />தண்ணீர்க் குழாய் , மின்சாரம்,<br />கனிவுடன் மருந்து போடும்<br />அரசு மருத்துவர்,<br />வேலைக்கு ஆளின்றி<br />தேடி அலையும்<br />வேலை வாய்ப்பு அதிகாரி<br />உழுதவன் கணக்கில்<br />ஆயிரமாய் இலாபம்;<br />.<br />சுத்தமாய் நகரம்,<br />சுறுசுறுப்பாய் மக்கள்<br />தவறு கண்டு<br />இமை சிவக்கும்<br />இளைஞன்.<br />.<br />இவை<br />என் தாய்<br />என்னைத் தட்டி எழுப்பும் வரை.</div><div align="right">..<br />-பி.செல்வராஜ்<br /></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-19446682070920191412008-02-10T00:38:00.001-08:002008-02-10T00:38:27.441-08:00சொல்லுங்கள்<div align="right">தொழிற் சாலையின்<br />உயர்ந்த கூரைகளிலும்<br />மெளனம் கவிந்தது.<br />மெர்க்க்குரி விளக்குகளும்<br />துருப்பிடித்துப் போயின<br />..<br />ஆதிகாலக்<br />குகையைப் போன்ற<br />அர்த்தமற்ற இருளுக்கும்<br />நிசப்த்த்திற்கும்<br />யார் பொறுப்பு?<br />..<br />சுழன்று கொண்டிருந்த<br />எல்லாச் சக்கரங்களையும்<br />இயங்கிக் கொண்டிருந்த<br />எல்லா உயிர்களையும்<br />ஒரு நொடிக்குள்<br />நிறுத்தி வைத்தது<br />யார்?<br />..<br />தங்களின்<br />கவலைகளையும்<br />கனவுகளையும்<br />சோகங்களையும்<br />நம்பிக்கைகளையும்<br />சுமந்து வந்த<br />நம்மை<br />முடமாக்கியது யார்?<br />..<br />கண்களை<br />எதிர் காலத்தைக்<br />குருடாக்கியது யார்?<br />..<br />அரை வயிற்றுக் கஞ்சிக்கும்<br />ஆடைக்கும்<br />நம்மை<br />அலைய விட்டவர்கள்<br />யார்?<br />..<br />அவர்கள்-<br />.<br />நிரம்பி வழியும்<br />மதுக் கிண்ணங்களோடு<br />தொழிற்சங்கத் தலைவரின்<br />தோள் மீது கைபோட்டுக்<br />கொண்டிருக்கிறார்கள்<br />ஒநாய்களையும்<br />நாய்களையும்<br />சட்டத்தையும்<br />காவலுக்கு வைத்துவிட்டு<br />குண்டு துளைக்காத<br />கூண்டுகளுக்குள்<br />பாதுகாப்பாக<br />இருக்கிறார்க்ள்.<br />..வேதப்புத்தகங்களை<br />பகவத் கீதைகளை<br />ரத்தக் கறைபடிந்த<br />விரல்களால்<br />புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்<br />.வருத்தப்பட்டு<br />பாரம் சுமக்கிறவர்களே<br />இவர்களை நீங்கள்<br />என்ன செய்யப் போகிறீர்கள்?<br />..உங்கள் குழந்தைகளின்<br />சின்னஞ்சிறு குடல்<br />குளிர்வதெப்போது?<br />..<br />உங்கள் பானைகளில்<br />சந்தோஷம், பொங்கி<br />வழிவதெப்போது?<br />..<br />உங்களை முடமாக்கியவர்களை<br />நீங்கள்<br />என்ன செய்யப் போகிறீர்கள்?<br />..<br />சொல்லுங்கள்.<br />*****************<br />-புதியஜீவா</div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-77227431102243886272008-02-10T00:32:00.000-08:002008-02-10T00:33:17.820-08:00பரவசம் !<p align="right">உயிரிலிருந்து<br />உள்ளெழும்புகிறது நேசம்<br />பல சமயங்களில்<br />.<br />சொற்கள் கடந்த கவிதையாய்<br />சூழ்ந்து நிற்கிறது பரவசம்.<br />.<br />உண்மைகளை ஏந்தி வாழ்வதற்கும்,<br />பதாகையோடு<br />இணைந்து பயணிப்பதற்கும்,<br />வானில் எழும் பறவையாய்<br />உலகையே உள்வாங்கி<br />.<br />மெளனமாய் உவகை கொள்வதற்கும்<br />பெருமிதமாய் இருக்கிறது.<br />.வெல்வோம் என்ற வெளிச்சம் பட,<br />வாழ்க்கை மொத்தமும்<br />ஒளிர்கின்ற தருணங்க்ளில்.....<br />நம்பிக்கையோடு நிமிர்ந்து<br />யோசிக்கையில்<br />உடனடியாய் வேண்டும்<br />போலிருக்கும்<br />.<br />புரட்சி<br />..<br />-அரசு<br />..<br />புதிய கலாச்சாரம் மே 2000</p><div align="right"></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-1200916476911218152008-02-10T00:31:00.000-08:002008-02-10T00:32:36.142-08:00உயிர்த்தெழு !<a href="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/urithelu.jpg"><img style="WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/urithelu.jpg" border="0" /></a><br /><br /><div align="right">மெளனத்தை உடை.<br />மர உதடு திற<br />பேசு !<br />..<br />பூமியின் புன்னகையை<br />மீட்டுத் தரும்<br />வேட்கையோடு<br />..<br />முன்முளைத்த மரபுகளை<br />முறித்தெறியும் வேகத்தோடு<br />பேசு !<br />..<br />கலைகளின்<br />ஒப்பனைகளைக் கழற்றி<br />நிகழ்வின் காயங்களை<br />வலியின் கனத்தோடு<br />விவரி !<br />..<br />பூவெறிந்து<br />பாவெறிந்து<br />கண்ணீர் எறிந்து<br />..<br />கற்களைக் கரைக்கும்<br />முயற்சியைத் துற.<br />..<br />அர்த்தங்களின்<br />அடர்த்தி குறையாத<br />ஆவேசத்தோடு<br />வீசு சொற்களை!<br />..<br />வேர்வரை விழட்டும்<br />மடமைகள்<br />..<br />இயல்களைத்<br />தெரிந்து கொள்.<br />இசங்களைப்<br />புரிந்து கொள்<br />..<br />பேசு!<br />.<br />சீழ்பிடித்த<br />சிகரங்களின் உள்ளழுக்கை<br />உண்மை விரல்களால்<br />தொடு<br />..<br />முகவரிகளின்<br />அக வரிகளை ஆய்வு செய்<br />..<br />உன்னை<br />இயல்பாய் வெளிப்படுத்து<br />பேசு!<br />..<br />ஞானவெறி கொள்!<br />ஞாலவெளி பற.<br /></div><div align="right">-தீபன்</div><div align="right">..</div><div align="right">புதிய கலாச்சாரம் மே 2000<br /></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-931994358841360485.post-85090599825450717472008-02-10T00:27:00.000-08:002008-02-10T00:28:26.221-08:00எதுங்கடா சமத்துவம் ?<p align="right">காக்கி சட்டை மேசட்டை<br />போட்டுகிட்டு<br />கார்பரேஷன்ல வேல பாக்குற<br />சுந்தரேசு அண்ணனுக்கு மட்டுந்தான்<br />பீ,மூத்திரம் அள்ளுர வேல.<br />பழையபடியே....<br />.<br />பழைய சோறு கொழம்பு<br />வாங்குறதுக் கோசரம்<br />ஐயர் போகவா<br />மேகலை நகர் முத்தம்மா....<br />அதுவும்<br />புழக்கடை பக்கமா போனாத்தான்.<br />ஊருக்குள்ள<br />பொணம் விழுந்தா<br />வள்ளுவந் தெரு<br />வாசகி புருஷனுக்குச் சேதி வந்துடும்<br />எரிக்கவோ...புதைக்கவோ...<br />எப்பவுமே.<br />முதலியாரு<br />மூணு வயசு மவன கண்டாலும்<br />இடுப்புக்குத் துண்டு போகனும்<br />இல்லன்னா செருப்படிதான்<br />இப்பவும்<br />ச்சீசீ...<br />பெரிசா பீத்திக்காத<br />சமத்துவபுரமுன்னு.</p><p align="right">-நீரை.ப.மகேந்திரன்</p><div align="right"></div>புதிய கலாச்சாரக் கவிதைகள்http://www.blogger.com/profile/05450455887598170513noreply@blogger.com0