Sunday, February 10, 2008

"நாளை உலகம்"


என் தெருவில்
தொகுதி எம்.எல்.ஏ
திண்ணையில் எம்.பி
.
சரியாக வரும்
நகரப் பேருந்து
தட்டுப்பாடு இல்லாத
தண்ணீர்க் குழாய் , மின்சாரம்,
கனிவுடன் மருந்து போடும்
அரசு மருத்துவர்,
வேலைக்கு ஆளின்றி
தேடி அலையும்
வேலை வாய்ப்பு அதிகாரி
உழுதவன் கணக்கில்
ஆயிரமாய் இலாபம்;
.
சுத்தமாய் நகரம்,
சுறுசுறுப்பாய் மக்கள்
தவறு கண்டு
இமை சிவக்கும்
இளைஞன்.
.
இவை
என் தாய்
என்னைத் தட்டி எழுப்பும் வரை.
..
-பி.செல்வராஜ்

No comments: