Sunday, February 10, 2008

பரவசம் !

உயிரிலிருந்து
உள்ளெழும்புகிறது நேசம்
பல சமயங்களில்
.
சொற்கள் கடந்த கவிதையாய்
சூழ்ந்து நிற்கிறது பரவசம்.
.
உண்மைகளை ஏந்தி வாழ்வதற்கும்,
பதாகையோடு
இணைந்து பயணிப்பதற்கும்,
வானில் எழும் பறவையாய்
உலகையே உள்வாங்கி
.
மெளனமாய் உவகை கொள்வதற்கும்
பெருமிதமாய் இருக்கிறது.
.வெல்வோம் என்ற வெளிச்சம் பட,
வாழ்க்கை மொத்தமும்
ஒளிர்கின்ற தருணங்க்ளில்.....
நம்பிக்கையோடு நிமிர்ந்து
யோசிக்கையில்
உடனடியாய் வேண்டும்
போலிருக்கும்
.
புரட்சி
..
-அரசு
..
புதிய கலாச்சாரம் மே 2000

No comments: